இலங்கை கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா படுதோல்வி
கண்டி:
இலங்கை-கண்டி நகரில் நடைபெற்ற இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில்10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வென்றது. ஆனாலும், இந்தியா இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்து,"சந்தோஷ"மடைந்தது.
முதல் டெஸ்ட் கடந்த 14ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பீல்டிங் செய்யத்தீர்மானித்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 187 ரன்கள்எடுத்தது. அடுத்து பேட் செய்ய வந்த இலங்கை அணி, மிகச்சிறப்பாக ஆடி 362 ரன்கள் எடுத்து தனது அனைத்துவிக்கெட்டுகளையும் இழந்தது.
இதைத்தொடர்ந்து 2வது இன்னிங்சிலும் இந்திய வீரர்கள் மிகச் சொற்ப ரன்களுடன் ஒருவர் பின் ஒருவராகஆட்டமிழந்தார்கள். இதனால் அணியின் ஸ்கோர் 180 ஆக இருந்த போது 9 வீரர்களும் ஆட்டமிழந்து இருந்தனர்.டிராவிட் அவுட் ஆகாமல் இருந்தார்.
கடைசி விக்கெட்டுக்கு டிராவிட்டும் வெங்கடேஷ் பிரசாத்தும் இணைந்து 52 ரன்கள் எடுத்தது குறிப்பிடத் தக்கது.இலங்கையின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரைவிட, இந்தியாவின் மொத்த ஸ்கோர் 5 ரன்கள் அதிகமிருந்ததால்இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்த்தது இந்திய அணி.
இந்நிலையில் வெறும் 6 ரன்கள் மட்டுமே எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது.
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய கேப்டன் ஜெயசூர்யா, ஜாஹீர்கான் பந்தில் ஒரு பவுன்டரி அடித்தார்.பிறகு இரண்டு உதிரி ரன்கள் எடுத்து மேட்சை முடித்து வைத்தார்.
இதையடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கைஅணி 1-0 என்ற நிலையில் முன்னனியில் இருக்கிறது.
அடுத்த டெஸ்ட் கண்டியில் வருகிற 22 -ம் தேதி புதன்கிழமை தொடங்குகிறது.












Click it and Unblock the Notifications