Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செப்.1 முதல் மீண்டும் கொழும்பு-டெல்லி விமான சேவை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

கடந்த 24ம் தேதி விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்குப் பிறகு, "இலங்கை ஏர்லைன்ஸ்" மீண்டும் டெல்லிக்குவிமானத்தை இயக்கவுள்ளது.

கடந்த மாதம் 24ம் தேதி விடுதலை புலிகளின் தற்கொலை படையினர் இலங்கை விமானப்படை தளத்திலும்,பண்டாரநாயகா சர்வதேச விமான நிலையத்திலும் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலால், இலங்கைஅரசுக்கு ரூ.4,500 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை ஏர்லைன்ஸிடம் இருந்த 12 பயணிகள் விமானத்தில் 4 விமானங்கள் அழிந்து போயின. மேலும், 2விமானங்கள் சேதமடைந்தன. இதையடுத்து இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு விமானம் எதுவும் வரவில்லை.

இந்நிலையில், வியாழக்கிழமை இலங்கை ஏர்லைன்ஸின் செய்தித் தொடர்பாளர் மவுலோனா மோத்தாசெய்தியாளர்களிடம் கூறியதாவது:

இலங்கை ஏர்லைன்ஸ் மீண்டும் இந்தியாவிற்கு விமான சேவையை துவக்க உள்ளது. செப்டம்பர் மாதம் 1ம் தேதிமுதல் கொழும்புவிலிருந்து டெல்லிக்கு விமான சேவை ஆரம்பமாகும்.

ஆனாலும் வாரத்திற்கு இரண்டு விமானங்கள்தான் இயக்கப்படும். வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைஆகிய இரண்டு நாட்களிலும் கொழும்புவிலிருந்து இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கப்படும். முன்பு இந்த 2மார்க்கங்களிலும், வாரத்திற்கு 4 விமானங்கள் இயக்கப்பட்டன.

செப்டம்பர் 1ம் தேதி 292 பயணிகளுடன் "ஏர்பஸ் 330" கொழும்பிலிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் செல்லும்என்றார் மோத்தா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+