பதவி போய்..பதவி வந்து..பதவி மாறி..பதவி போய்..பதவி வந்து...
சன்னை:
சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷனர் காளிமுத்து, வாட்டி எடுக்கப்பட்டு ஒருவழியாக சென்னை ஊர்க்காவல் படை பயிற்சி பிரிவின் கூடுதல் டி.ஜி.பியாகநியமிக்கப்பட்டுள்ளர். இதில் எத்தனை நாள் அவரை வைத்திருப்பார்களோதெரியவில்லை.
அ.தி.மு.க. பதவிக்கு வந்ததும், இவர் சென்னை நகர போலீஸ் கமிஷனர்பதவியிலிருந்து தூக்கப்பட்டார். இதையடுத்து இவருக்கு ஒரு டப்பா பதவிவழங்கப்பட்டது.
சில நாட்கள் கழித்து காளிமுத்து சென்னையில் உள்ள சமூகநீதி சி.ஐ.டி. பிரிவின்கூடுதல் டி.ஜி.பியாக நியமிக்கப்ப்டடார். இந்த பதவியிலிருந்தும் சில நாட்களிலேயேநீக்கப்பட்டார்.
அதன் பின் அவருத்கு புதிய பதவி எதுவும் அளிக்கப்படவில்லை. இவர்காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார்.
இந் நிலையில் நேற்று காளிமுத்துவுக்கு புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் நரேஷ்குப்தா பிறப்பித்துள்ளஉத்தரவில்,
சென்னை சமூகநீதி சி.ஐ.டி. பிரிவின் கூடுதல் டி.ஜி.பியாக பதவி வகித்து வந்தகாளிமுத்து ஐ.பி.எஸ். ஏற்கனவே அந்த பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டார்.
தற்போது அவர் சென்னையில் உள்ள ஊர்க்காவல் படை பயிற்சிபிரிவின் கூடுதல்டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பதவியில் இருந்த கோபாலன்ஐ.பி.எஸ். ஓய்வு பெற்றுவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் 4 பேர் மாற்றம்:
காளிமுத்து தவிர மேலும் 4 ஐ.பி.எஸ் அதிகாரிகளும் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.
திருச்சியில் தமிழ்நாடு மின் வாரிய ஊழல் தடுப்பு போலீஸ் ஐ.ஜியாக பணியாற்றிவந்த கே.ராமனுஜம் அங்கிருந்து மாற்றப்பட்டுள்ளார்.அவர் சென்னை தொழில்நுட்பசேவைப் பிரிவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தொழில்நுட்ப சேவைகள் பிரிவின் ஐ.ஜியாக பணியாற்றி வந்த சரப்ஜித் சிங்,அங்கிருந்து மாற்றப்பட்டு. சென்னை மாநில மனித உரிமைக் கமிஷனின் ஐ.ஜியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் செயல்முறை ஐ.ஜியாக பணியாற்றிய வி.பாலச்சந்திரன் அங்கிருந்துமாற்றப்பட்டு சென்னை சட்ட ஒழுங்கு ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications