சிகிச்சைக்காக தென்னாப்பிரிக்கா செல்கிறார் சச்சின்
மும்பை:
வலது கால் விரலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு சிகிச்சைக்காக இந்திய கிரிக்கெட் வீரர்சச்சின் டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்கா செல்லவிருக்கிறார் என்று அவருக்கு சிகிச்சைஅளித்து வரும் மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இதனால் டெண்டுல்கரால் தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் கிரிக்கெட்போட்டியில் பங்கேற்க இயலவில்லை.
இந்நிலையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்காசெல்லவிருக்கிறார் என்று டெண்டுல்கருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் ஆனந்த்ஜோஷி தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், இந்த மாதம் 22ம் தேதி அல்லது 23ம் தேதிடெண்டுல்கர் தென் ஆப்பிரிக்கா செல்வார். ஜோகானஸ்பர்க்கில் இருக்கும் எலும்புமுறிவு சிகிச்சை நிபுணர் ஃபெர்குசேனிடம் வலது கால் கட்டைவிரல் எலும்பு முறிவுக்காகசிகிச்சை பெறவுள்ளார்.
சிகிச்சைக்கான அனைத்து செலவையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்ஏற்கிறது என்றார்.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெயவந்த் லேலேகூறுகையில், விரைவில் டெண்டுல்கர் குணமடைந்து விடுவார் என்று நம்புகிறோம்.வரும் அக்டோபர் மாதம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்குசுற்றுப்பயணம் செல்லவிருக்கிறது.
அப்போது நடக்கும் போட்டிகளில் டெண்டுல்கர் விளையாடுவார். அதற்குள் அவர்பூரண குணமடைந்துவிடுவார் என்று நம்புகிறோம் என்றார்.