திருநெல்வேலியில் தொடரும் ஜாதிக் கொலைகள்: 3 பஞ்சாயத்து தலைவர்கள் கைது
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் நடந்து வரும் ஜாதிக் கொலைகள் தொடர்பாக 3 பஞ்சாயத்துத்தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாமிரபரணி ஆற்றில் குளிப்பது தொடர்பாக அந்த கிராமத்தில் இரண்டு தரப்பினருக்குஇடையே மோதல் இருந்து வந்தது. இந்த மோதல் தொடர்பாக ஒரு தரப்பினர்போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
முனியசாமிதான் போலீசில் புகார் கொடுத்தார் என்று அவரை எதிர் தரப்பினர் வெட்டிக்கொலை செய்தனர். கொலை செய்யப்பட்ட முனியசாமியின் குடும்பத்துக்கு அரசுசார்பாக ரூ. 1.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
இந்நிலையில் கலங்க வைக்கும் விதமாக அடுத்த கொலை ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
கருங்காடுக்கு அருகே உள்ள சத்திரபுதுக்குளத்தைச் சேர்ந்த சுரேஷ் (வயது 20) தனதுநண்பர் முருகனுடன் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு மர்மக் கும்பல்அவர்கள் இருவரையும் அரிவாளால் வெட்டியது.
இதில் சுரேஷ் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த தொடர் கொலையில் தொடர்பிருக்ககூடும் என்று அந்த பகுதி பஞ்சாயத்துதலைவர் முத்தையா தேவர், அந்த பகுதி ஜாதி சங்க தலைவர்கள் மதன், ராமுஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொலை தொடர்பாக 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கொலைசெய்யப்பட்ட சுரேஷ் குடும்பத்துக்கு அரசு நிவாரண நிதியிலிருந்தூ ரூ. 1.5 லட்சத்தைகலெக்டர் வழங்கினார்.












Click it and Unblock the Notifications