For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: ஓரளவு ஆதரவு

By Staff
Google Oneindia Tamil News

கோயம்புத்தூர்.:

தமிழகம் முழுவதிலும் பஞ்சாலைத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை முதல்காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினர்.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தப்போராட்டம் தொடங்கியது. தமிழகத்தின் பஞ்சாலை நகர் என்று அழைக்கப்படும்கோவை மாவட்டத்தில் வேலைநிறுத்தம் முழுமையாக இருந்தது. கிட்டத்தட்டஅனைத்துத் தொழில் நிறுவனங்களிலும் ஊழியர்கள் முழு அளவில் பணிக்குவரவில்லை.

மாநிலத்தின் பிற பகுதிகளில் ஓரளவே பாதிப்பு இருந்தது. நூற்பாலைத் தொழில்நிறுவனங்கள் ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இதற்கிடையே, பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டக் குழுவுடன் மாநில அரசு வரும்28ம் தேதி சென்னையில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளது.

அதுகுறித்து முடிவெடுப்பதற்காக கோவையில் 8 பஞ்சாலைத் தொழிலாளர்சங்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த பிரதிநதிகள் திங்கள்கிழமை சந்தித்துப்பேசவுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X