For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யாழ்ப்பாணத்தில் இலங்கை விமானங்கள் குண்டுவீச்சு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் நேற்று அதிகாலை விடுதலைப்புலிகள் காவல் நிலையத்தைத் தாக்கி 15போலீசாரைக் கொன்றதையடுத்து இலங்கை இராணுவமும் பதிலுக்கு புலிகள் மீது விமானத் தாக்குதல் நடத்தியது.

கொழும்பிலிருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள அம்பாறையை அடுத்த புறநகர் பகுதியில் உள்ள சென்ட்ரல்கேம்ப் போலீஸ் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு புலிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 15போலீசார் அந்த இடத்திலேயே இறந்தனர். 18 போலீசார் படுகாயமடைந்தனர்.

புலிகள் தாக்குதலையடுத்து போலீசாரும் திருப்பிச் சுட்டனர். இதில் 3 புலிகள் கொல்லப்பட்டனர். 7 பேர்காயமடைந்தனர்.

இதையடுத்து புலிகள் அருகாமையில் உள்ள சிறப்பு அதிரடிப் படையினரின் முகாமின் மீதும் தாக்குதல் நடத்தினர்.இந்தப் படை யாழ்பாணப் பகுதியில் ராணுவத்துடன் இணைந்து புலிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது.

யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புலிகள் முகாம்கள் அதிகமாக உள்ளன. இந்தப் பகுதிகளில்இலங்கை இராணுவம் விமானத் தாக்குதல் மூலம் புலிகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இது குறித்து அந்நாட்டுஇராணுவச் செய்தித் தொடர்பாளர் கருணாரத்னே கூறியதாவது,

புலிகள் பதுங்கி இருப்பதாக கருதப்படும் யாழ்ப்பாணம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இராணுவம் விமானத்தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலில் தயாரான "க்பிர்" ரக ஜெட் விமானங்கள் இந்தத் தாக்குதலை நடத்திவருகின்றன.

இதுவரை தாக்குதலில் பாதிக்கப்பட்டவலர்களைப் பற்றிய செய்தி வரவில்லை. அதேபோல புலிகள் தரப்பில்இருந்தும் எதிர் தாக்குதல் எதுவும் இதுவரை நடைபெறவில்லை என்றார்.

புலிகள் போலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி பிறகு 4 மணி நேரம் கழித்து இந்தத் தாக்குதலை இலங்கைஇராணுவம் ஆரம்பித்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X