இலங்கை அரசு- எதிர்கட்சிகள் பேச்சு தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் சந்திரிகா அமைச்சரவையில் உள்ள முக்கிய அமைச்சர்களுடன் எதிர்கட்சித் தலைவர்கள்பேச்சுவார்த்தையை சனிக்கிழமை தொடங்கினர்.

இலங்கையில் நிலவிவரும் அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆளும் மக்கள் முன்னணியின் 6அமைச்சர்களும் எதிர்க் கட்சியான யு.என்.பி யைச் சேர்ந்த 4 தலைவர்களும் சந்தித்துப் பேசி வருகிறார்கள்.

இந்தப் பேச்சுவார்த்தையில் சந்திரிகா அரசில் அமைச்சர்களாக இருக்கும் ஜெயரத்னே, மஹிந்தா ராஜாபக்ஷே,லக்ஷ்மண் கதிர்காமர், அனுருத்த ரத்வதே, மங்கல சமரவீர மற்றும் நிமல் ஸ்ரீபால டி சில்வ ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

முக்கிய எதிர்கட்சியான யு.என்.பி. தரப்பில் இருந்து அதன் துணைத் தலைவர் கரு ஜெயசூர்யா, சரிதா ரத்வதே,டைரோன் பெர்ணாண்டோ மற்றும் சோஷ்கி ஆகிய 4 பேர் பேசி வருகின்றனர்.

இந்தப் பேச்சுவார்த்தை இன்று முதல் 28ம் தேதி வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

மொத்தம் உள்ள 225 எம்.பிக்களில் 115 எம்.பிக்கள் ஆதரவைப் பெற்றுள்ள எதிர்கட்சிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அரசு கொண்டுவந்த பாராளுமன்ற ஒத்திவைப்புத் தீர்மானத்தையும், எதிர்க் கட்சிகளின் நம்பிக்கை இல்லாதீர்மானம் மீது வரும் அக்டோபர் 18 ம் தேதி நாடு முழுவதும நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள வாக்கெடுப்பை ரத்துசெய்யவும் எதிர்க் கட்சிகள் வலியுறுத்துகின்றன.

ஆனால் இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே எதிர்கட்சிகளின் இந்த வாதத்தை ஏற்றுக் கொள்ளமறுத்துவிட்டார்.

மேலும் இந்தக் கூட்டத்தில், தேர்தல்கள் நடத்துவது, நீதித்துறை விவகாரங்கள், பத்திரிக்கைத்துறை, பொதுமக்கள்சேவை, காவல் துறை விவகாரங்கள் ஆகியவற்றைக் கவனிக்க தனிக் குழுக்கள் அமைக்கவும் எதிர்கட்சிகள்அரசுக்கு பரிந்துரை செய்யும் எனவும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+