சிகிச்சைக்காக தென்னாப்பிரிக்கா செல்கிறார் சச்சின்
மும்பை:
வலது கால் கட்டைவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு சிகிச்சைக்காக டெண்டுல்கர் இன்றுஇரவு தென்னாப்பிரிக்கா செல்லவிருக்கிறார்.
இதனால் அவர் தற்போது இலங்கையில் நடந்து வரும் போட்டியில் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் அவர் எலும்பு முறிவு சிகிச்சைக்காக தென்னாப்பிரிக்கா சென்று, அங்குஉள்ள எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் மார்க் ஃபெர்குசனிடம் சிகிக்சைபெறுவதற்காக ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்கா செல்கிறார்.
இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறுகையில்,டெண்டுல்கர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.30 மணிக்கு ஜொகானஸ்பர்க் செல்லும்தென்னாப்பிரிக்க விமானம் மூலம் தென்னாப்பிரிக்கா செல்லவிருக்கிறார் என்றனர்.
வரும் அக்டோபர் மாதம் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில்சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறது. அதற்குள் டெண்டுல்கர் பூரண குணமடைந்துவிடுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நம்பிக்கைதெரிவித்தனர்.
டெண்டுல்கருக்கான மருத்து செலவு அனைத்தையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுவாரியமே ஏற்றுக் கொள்ளும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.