முதலில் ஜெ. சொல்லட்டும்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரத் தயார் என்று ஜெயலலிதா முதலில் வெளிப்படையாக கூறட்டும். பிறகுபார்க்கலாம் என திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

தே.ஜ. கூட்டணியில் சேர அதிமுக தயார் என்று கூறினால், உடனே திமுகவை பாஜக வெளியேற்றிவிடும் என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியதற்கு கருணாநிதி இவ்வாறு பதிலளித்தார்.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றவில்லை என்பதற்காக மத்திய அரசுக்குக் கொடுத்துவரும் ஆதரவை திமுகவாபஸ் பெற வேண்டும் என்று அமைச்சர் தம்பிதுரை சட்டசபையில் கூறினார்.

இதற்குப் பதிலளித்த திமுக எம்எல்ஏவான துரைமுருகன், "சும்மா கூட்டணியிலிருந்து வெளியே வாருங்கள்,வெளியே வாருங்கள் என்று சொல்கிறீர்கள். நாங்கள் வெளியே வந்துவிட்டால், உள்ளே போகமாட்டோம் என்றுநீங்கள் சத்தியம் செய்யத் தயாரா?" என்று கேட்டார்.

அப்போது திடீரென்று எழுந்த ஜெயலலிதா, "கூட்டணியிலிருந்து அவர்களாக வெளியே வரவேண்டும் என்றில்லை.நாங்கள் வருகிறோம் என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், திமுகவை பாஜகவினர் வெளியேற்றி விடுவார்கள்"என்று கூறினார்.

ஜெயலலிதாவின் இந்தப் பேச்சு, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்டபோது, "முதலில் அவர் பாஜக கூட்டணியில் சேரத் தயார் என்றுசொல்லட்டும். பிறகு பார்க்கலாம்.

இந்தப் பேச்சைப் பேசியவர் அவர்தான். எனவே, நீங்கள் இதைப் பற்றி கேள்வி கேட்க வேண்டியதுஅவரைத்தானே தவிர, என்னைக் கேட்டுப் பயனில்லை" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+