For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக ஆட்சி கொப்பரைத் தேங்காய் ஊழல்: விசாரணை ஆரம்பம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கடந்த திமுக ஆட்சியில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்ததில் ரூ.800 கோடி வரை முறைகேடுகள்நடந்துள்ளது என்றும் அதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வருவதாகவும் அமைச்சர் தனபால் கூறினார்.

இன்று (செவ்வாய்கிழமை) சட்டசபையில் நீதித்துறை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது அதிமுகஉறுப்பினர் மனோஜ் பாண்டியன் எழுந்து, கடந்த திமுக ஆட்சியின் 5 ஆண்டுகளில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும்ரூ.377 கோடி வரை முநைகேடுகள் நடந்துள்ளது. அது பற்றி விசாரிக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்துஅறிய விரும்புவதாகச் சொன்னார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் தனபால் கூறியதாவது,

கடந்த ஆட்சியில் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்வதில் ரூ.800 கோடி வரை முறைகேடுகள்நடைபெற்றுள்ளன. அது பற்றி விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு லஞ்ச ஒழிப்புப் போலீசார்கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். விசாரணை மிக விரைவாக நடந்து வருவதாக போலீசாரிடமிருந்து தகவல்கள்வந்துள்ளன என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X