டான்சி: சுப்பிரமணியம் சுவாமி உருவாக்கிய பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டான்சி வழக்கில் அரசு தரப்பில் தன்னையும் ஒரு வாதியாக்க வேண்டும் என்று சுப்பிரமணியம் சுவாமி நீதிபதிபாலசுப்ரமணியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா மீதான டான்சி வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அப்பீல்மனுக்கள் மீதான விசாரணை நேற்று முதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த வழக்கை உயர் நீதி மன்ற நீதிபதிபாலசுப்பிரமணியம் விசாரித்து வருகிறார். ஜெயலலிதா சார்பில் அவரது வக்கீல் வேணுகோபால் இன்றும் ஆஜராகிதனது வாதங்களை கோர்ட் முன்பு வைத்தார்.

ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த இந்த வழக்கில் இன்றுடன்ஜெயலலிதா தரப்பு வக்கீலின் வாதம் முடிவடைந்தது.

இரண்டாவது நாளான இன்று இந்த வழக்கில் முக்கிய சாட்சியான ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிகோர்ட்டில் ஆஜர் ஆனார்.

தன்னையும் ஒரு அரசுதரப்பு வாதியாக இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதியிடம்கோரிக்கை மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இது பற்றி நீதிபதி இன்னும் முடிவு அறிவிக்கவில்லை. வழக்கு முடியம் நிலையில் சுப்பிரமணியம் சுவாமி இவ்வாறுதன்னையும் வாதியாக இணைத்துக் கொள்ள கோரியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

நாளை முதல் சசிகலா தரப்பு வாதங்களை அவரது வக்கீல், நீதிபதியிடம் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+