டான்சி: சுப்பிரமணியம் சுவாமி உருவாக்கிய பரபரப்பு
சென்னை:
டான்சி வழக்கில் அரசு தரப்பில் தன்னையும் ஒரு வாதியாக்க வேண்டும் என்று சுப்பிரமணியம் சுவாமி நீதிபதிபாலசுப்ரமணியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த இந்த வழக்கில் இன்றுடன்ஜெயலலிதா தரப்பு வக்கீலின் வாதம் முடிவடைந்தது.
இரண்டாவது நாளான இன்று இந்த வழக்கில் முக்கிய சாட்சியான ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிகோர்ட்டில் ஆஜர் ஆனார்.
தன்னையும் ஒரு அரசுதரப்பு வாதியாக இந்த வழக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நீதிபதியிடம்கோரிக்கை மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
இது பற்றி நீதிபதி இன்னும் முடிவு அறிவிக்கவில்லை. வழக்கு முடியம் நிலையில் சுப்பிரமணியம் சுவாமி இவ்வாறுதன்னையும் வாதியாக இணைத்துக் கொள்ள கோரியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
நாளை முதல் சசிகலா தரப்பு வாதங்களை அவரது வக்கீல், நீதிபதியிடம் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.