குணமடைந்தார் சச்சின்
டர்பன்:
இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வலது கால் கட்டைவிரல் எலும்பு முறிவுக்கான சிகிச்சைவெற்றிகரமாக முடிந்தது என்று அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக டெண்டுல்கர் கடந்த 26ம் தேதி தென்னாப்பிரிக்கா கிளம்பிச் சென்றார்.
டெண்டுல்கருக்கு பிரபல எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்ர் மார் ஃபர்குசன் சிகிச்சை அளித்தார். அவர்வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில்,
டெண்டுல்கரின் வலது கால் கட்டை விரல் எலும்பு முறிவுக்கான சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.ஜொகான்னஸ்பர்க் ஸ்போர்ட்ஸ் கிளினிக்கில் டெண்டுல்கருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவர் அணியும் ஷூலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அந்த ஷூ வை அணிந்தபின், கால் விரல் வலிகுறைந்துள்ளதாக டெண்டுல்கர் கூறினார்.
டெண்டுல்கருக்காக தயாரிக்கப்பட் சிறப்பு ஷூ க்கள் தென்னாப்பிரிக்காவிலேயே அவருக்கென ஸ்பெஷலாகத்தயாரிக்கப்பட்டவை. இந்த ஷூ க்களை டெண்டுல்கர் அணியலாம் என்று நாங்களும் அங்கீகரித்துள்ளோம்என்றார் ஃபர்குசன்.
இன்னும் 2 நாட்களில் டெண்டுல்கர் சில பயிற்சி ஆட்டங்களில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.செப்டம்பர் மாதம் 18ம் தேதி லண்டனில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் டெண்டுல்கர் பங்கேற்கவும் அதிகவாய்ப்புகள் உள்ளன.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் விளையாடும் டெஸ்ட்போட்டிகளில் டெண்டுல்கர் விளையாடுவார் என்றும்கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜவகல் ஸ்ரீநாத்துக்கு தோள்பட்டை அறுவை சிகிச்சையையும், அனில் கும்ப்ளேக்குமூட்டு சிகிச்சையையும் வெற்றிகரமாக செய்து முடித்தவர் ஃபர்குசன் என்பது குறிப்பிடத்தக்கது.