இராக்கில் இந்தியக் குழு
பாக்தாத்:
இந்திய-இராக் உறவை மேம்படுத்த ராஜ்யசபைத் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா தலைமையில் இராக்தலைநகர் சென்றுள்ள இந்தியக் குழு பாக்தாத் சென்றடைந்தது.
இதையடுத்து இந்தியாவும், இராக்குடன் எந்தவிதத் தொடர்புகளும் வைத்துக்கொள்ளாமல் இருந்தது.
இந்நிலையில் இந்தியாவில் பெருகிவரும் எரிபொருள் பற்றாக்குறையைக் கருத்தில்கொண்டு, அதைச் சமாளிக்கஇராக் நாட்டுடன் நல்லுறவைத் தொடர்வது அவசியம் என்று மத்திய அரசு கருதியது.
இதுகுறித்து அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி, அவர்களிடம் இராக்குடன் மீண்டும்நட்புறவைத் தொடர்வது பற்றி கருத்துக் கேட்கப்பட்டது.
அந்தக் கூட்த்தில் கலந்து கொண்ட பெரும்பாலான தலைவர்களின் கருத்துக்கள் மத்திய அரசின் முடிவுக்குஆதராவாக இருந்தன.
இதையடுத்து ராஜ்யசபை துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா தலைமையில் 81 பேர் கொண்ட குழு கடந்தவெள்ளிக்கிழமை அதிகாலை பாக்தாத் கிளம்பியது.
3 நாள் பயணம் மேற்கொண்டுள்ள இந்தக் குழுவில் எம்.பிக்கள், எழுத்தாளர்கள், வியாபாரிகள் மற்றும் சினிமாத்துறையினரும் சென்றுள்ளனர். அங்கு இவர்கள் பல்வேறு துறையினரைச் சந்தித்து வாணிபம் மற்றும் அரசியல்உறவுகளை ஏற்படுத்தப் பேச்சு நடத்துவார்கள்.
இந்தக் குழு நேற்று பாக்தாத் சென்றடைந்ததது. பாக்தாத் விமான நிலையத்தில் இறங்கியவுடன் நஜ்மா நிருபர்கள்கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போது,
கடந்த சில ஆண்டுகளாக சில துரதிர்ஷ்ட வசமான சம்பவங்கள் நடந்திருந்தாலும் (2 நாடுகளுக்கும் தொடர்புவிட்டுப்போனது),
இந்தியா இராக்குடன் நட்புறவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமாகத் தான் இருந்தது. இராக் மீதான தடைவிரைவில் நீக்கப்பட்டு,
அவர்கள் இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளுக்கும் சென்று ஈராக்குடன் வர்த்தகத்தில் ஈடுபடுவார்கள் என்றுநாங்கள் நம்புகிறோம் என்று நஜ்மா கூறினார்.
இது குறித்து அந்நாட்டு தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அப்துல்லா சத்தார் கூறியதாவது,
இந்தியாவுக்கு நாங்கள் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். ஏனென்றால் 2 நாடுகளின் மக்களும்,தலைவர்களும் முன்பிருந்து நட்புடன் இருந்துவருகிறார்கள், இன்னும் இந்த நட்பு வளரும் என்று நம்புகிறோம்என்றார்.