For Quick Alerts
For Daily Alerts
Just In
நீதிபதிகளைக் குறை கூறவில்லை... ஜெ. விளக்கம்
சென்னை:
சட்டசபையில் நீதிமன்றங்கள் பற்றியும், நீதிபதிகள் பற்றியும் தான் அவதூறாகப் பேசவில்லை என்று முதல்வர்ஜெயலலிதா மறுத்துள்ளார்.
இதற்கு திங்கள்கிழமை சட்டசபையில் விளக்கம் அளித்தார் ஜெயலலிதா. அவை விதி 109-ன் கீழ் தன்னிலைவிளக்கம் அளித்து ஜெயலலிதா பேசுகையில்,
காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது நான் கூறிய சில கருத்துக்களை சில பத்திரிக்கைகள்தவறாகப் பிரசுரித்துள்ளன.
நீதிமன்றங்கள் குறித்தோ, நீதித்துறை குறித்தோ நான் அவதூறாக எதுவும் பேசவில்லை. நீதிமன்றங்களைக்குறைத்தோ அல்லது குறை கூறியோ எந்தக் கருத்தையும் நான் தெரிவிக்கவில்லை.
நாட்டிலுள்ள ஒவ்வொரு நீதிபதியையும், நீதிமன்றத்தையும் நான் மதிக்கிறேன். எனக்கு பாதகமாக தீர்ப்புகள்கூறப்பட்டபோது கூட நீதிபதிகளையும், நீதிமன்றங்களையும் குறை கூறி நான் கருத்து வெளியிட்டதில்லை என்றார்ஜெயலலிதா.
Comments
Story first published: Monday, September 3, 2001, 5:30 [IST]