சென்னை ரயில்களில் திடீர் டிக்கெட் செக்கிங் - ரூ.95,000 வசூல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் இன்று (திங்கள்கிழமை) காலை திடீர் டிக்கெட் பரிசோதனைநடைபெற்றது. இதன் மூலம், டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடமிருந்து, ரூ.95,000 வரை அபராதத்தொகை வசூலிக்கப்பட்டது.

ரயில் பயணிகள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வது குறித்து தகவல் வந்ததையடுத்து, தென்னக ரயில்வே இந்தத்திடீர் பரிசோதனையை மேற்கொண்டது.

மின்சார ரயில்கள், வெளியூர் ரயில்கள் என ஒன்று விடாமல் அனைத்து ரயில்களிலும் உள்ள பயணிகள்பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இன்று நடந்த பரிசோதனையில் மட்டும், ஆயிரக்கணக்கான ரயில் பயணிகள், டிக்கெட் இல்லாமல் பயணம்செய்ததற்காக பிடிபட்டனர். அவர்களுக்கு உடனடியாக "ஸ்பாட் பைன்" விதிக்கப்பட்டது.

இந்த அபராதம் மூலமாக, பிற்பகல் வரை மட்டுமே ரூ.95,000 வரை வசூலானதாக ரயில்வே அதிகாரிகள்தெரிவித்தனர்.

இந்தத் திடீர் பரிசோதனை காரணமாக, ரயில் நிலைய பிளாட்பாரங்கள் முழுவதும் டிக்கெட் பரிசோதகர்கள்மயமாகக் காணப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+