பெரம்பலூரில் ஒட்டிப் பிறந்த ரெட்டைக் குழந்தைகள்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வயிறு ஒட்டிய நிலையில் பிறந்த ரெட்டைக்குழந்தைகளைப் பிரித்தெடுப்பது பற்றி மருத்துவர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
திருமணமாகி 15 ஆண்டுகள் கழித்து, இப்போதுதான் அவர்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது.
இதை ரெட்டைக் குழந்தை என்று சொல்வதை விட, 2 தலைகளுடைய ஒரு குழந்தை என்று சொல்வதுதான்பொருத்தமாக இருக்கும். ஏனென்றால், இக்குழந்தைக்கு 3 கால்களும், 4 கைகளும், ஒரே ஒரு பிறப்பு உறுப்பும்மட்டுமே உள்ளன.
முழுமையாக ஒரு குழந்தையாவது பிரித்தெடுக்கப்பட வேண்டும் என்பதற்காக, தற்போது இக்குழந்தை தஞ்சாவூர்அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுபற்றி டாக்டர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஆனால், இக்குழந்தை(களை)யைக் கவனித்து வரும் பாட்டியோ, "குழந்தை(களை)யைப் பிரித்து விடாதீர்கள்.நானே ஊருக்கு எடுத்துச் சென்று வளர்க்கிறேன்" என்று கூறி வருகிறார்.