For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அக்டோபர் 16, 18ல் உள்ளாட்சித் தேர்தல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் அடுத்த மாதம் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறஉள்ளன.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள், கிராம பஞ்சாயத்துகள் உட்பட அனைத்து உள்ளாட்சிஅமைப்புகளுக்கும் கடந்த 1996ம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.

இவற்றின் பதவிக் காலம் வரும் அக்டோபர் மாதம் 24ம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

இதையடுத்து, அந்தத் தேதிக்கு முன்னதாகவே உள்ளாட்சித் தேர்தல்களை நடத்தி உறுப்பினர்களைத் தேர்வுசெய்துவிட வேண்டும் என்பதற்காக, தீவிரப் பணிகளில் தேர்தல் கமிஷன் இறங்கியது.

தற்போது அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்குமான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

வேட்பு மனு தாக்கல் துவக்க நாள் - செப்டம்பர் 20, 2001

வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் - செப்டம்பர் 27, 2001

மனுக்கள் பரிசீலனை - செப்டம்பர் 28, 2001

வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாள் - அக்டோபர் 01, 2001

முதல் கட்ட தேர்தல் - அக்டோபர் 16, 2001

2வது கட்ட தேர்தல் - அக்டோபர் 18, 2001

ஓட்டு எண்ணிக்கை துவக்க நாள் - அக்டோபர் 21, 2001

தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்கும் நாள் - அக்டோபர் 25, 2001

"பஞ்சாயத்து ராஜ்" சட்டப்படி கடந்த 1996ம் ஆண்டு முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. அதன்பிறகு,தற்போது 2வது முறையாக இத்தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 மாநகராட்சிகளும், 104நகராட்சிகளும், 635 பஞ்சாயத்து யூனியன்களும், 12,584 கிராமப் பஞ்சாயத்துக்களும் உள்ளன.

இவற்றில் 4 மாநகராட்சிகள் திமுக வசமும், 2 மாநகராட்சிகள் தமாகா வசமும் உள்ளன. நகராட்சி, பஞ்சாயத்துயூனியன் மற்றும் கிராமப் பஞ்சாயத்து ஆகியவற்றில் பெரும்பாலானவற்றையும் இந்த 2 கட்சிளுமே வைத்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X