பெரம்பலூர்: லாரிகள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

பெரம்பலூர்:

பெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர்கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு சென்னையிலிருந்து இரும்பு கம்பிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி திருச்சிநோக்கி வந்து கொண்டிருந்தது. ரசாயன உரங்களை ஏற்றிக் கொண்டு மற்றொரு லாரி திருச்சியிலிருந்து சென்னைநோக்கி சென்று கொண்டிருந்தது.

இந்த 2 லாரிகளும், பெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் எதிரெதிராக வெகு வேகமாக வந்துகொண்டிருந்தன. அப்போது, திடீரென்று அந்த 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

இந்த விபத்தில் இரும்புக் கம்பிளை ஏற்றி வந்த லாரி டிரைவரும், மற்றொருவரும் சம்பவ இடத்திலேயேஉ.யிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் நிலைமைகவலைக்கிடமாக உள்ளது.

பெரம்பலூர் போலீசார், இவ்விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+