பெரம்பலூர்: லாரிகள் நேருக்கு நேர் மோதி 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பேர்கொல்லப்பட்டனர். 7 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த 2 லாரிகளும், பெரம்பலூர் அருகே சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் எதிரெதிராக வெகு வேகமாக வந்துகொண்டிருந்தன. அப்போது, திடீரென்று அந்த 2 லாரிகளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த விபத்தில் இரும்புக் கம்பிளை ஏற்றி வந்த லாரி டிரைவரும், மற்றொருவரும் சம்பவ இடத்திலேயேஉ.யிரிழந்தனர். மேலும் 7 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் நிலைமைகவலைக்கிடமாக உள்ளது.
பெரம்பலூர் போலீசார், இவ்விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications