மேட்டூரில் நீர் குறைவு: கலெக்டர்கள் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால், பயிர்களை காக்க மேற்கொள்ளவிருக்கும் நடவடிக்கைகள்குறித்து ஆலோசிப்பதற்காக, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆட்சி தலைவர்களும், உயர் அதிகாரிகளும்திருவாரூர் ஆட்சி தலைவர் அலுவலகத்தில் கூடி ஆலோசித்தனர்.

கடந்த 2 மாத காலமாக குறுவை பயிர் சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் பருவ மழை பொய்த்து விட்ட காரணத்தாலும்,கர்நாடகம் திறந்துவிட வேண்டிய நீரை திறந்துவிடாதகாரணத்தாலும், மேட்டூர்அணையின் நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

தற்போது மேட்டூரில் உள்ள நீர் 8 அல்லது 9 நாட்களுக்குத்தான் போதுமானதாக இருக்கும். அதன் பின் குறுவைசாகுபடிக்கு நீர் திறந்துவிடாத நிலை வந்துவிடும். இந்த சூழ்நிலை குறித்து விவாதிக்க தஞ்சாவூர், நாகப்பட்டினம்,திருவாரூர் ஆட்சி தலைவர்கள் கூடி திருவாரூர் ஆட்சி தலைவர் அலுவலகத்தில் கூடி விவாதித்ததனர்.

இந்த கூட்டத்தில் வருவாய்த் துறை உயர் அதிகாரிகள், பொதுப்பணித் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகளும்கலந்து கொண்டனர். அப்போது தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டை எவ்வாறு சமாளிப்பது என்பதுகுறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

கூட்டம் நடந்த இடத்திற்குள் செய்தியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படாததால் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகுறித்து எதுவும் தெரியவரவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+