உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி? - இளங்கோவன்
சென்னை:
அடுத்த மாதம் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து கட்சிமேலிடம் முடிவெடுக்கும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராக இருக்கிறது. ஆனால், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதா,கூட்டணி அமைந்தால் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து, கட்சி மேலிடம் முடிவு செய்யும்.கட்சி மேலிடம் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
சமீபத்தில் தமிழகத்தின் தென் மாவடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தேன். அந்த பகுதிகளில் சோனியாவுக்குபெரும் ஆதரவு உள்ளது.
அப்போது மூப்பனார் இருந்த போது த.மா.காவும் காங்கிரசும் இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்பினார்என்றார் இளங்கோவன்.
"தற்போது கோவிந்தவாசன் தலைமை ஏற்றிருக்கும் நிலையில் த.மா.காவும் காங்கிரசும் இணைந்து செயல்பட முயற்சிஎடுப்பீர்களா?" என்று நிருபர்கள் கேட்டபோது,
மூப்பனார் மறைந்தது காங்கிரசுக்கு மிகப் பெரிய இழப்பு. அவர் மறைந்து சில நாட்கள் மட்டுமே ஆகியிருக்கும்நிலையில் த.மா.கா- காங்கிரஸ் இணைந்து செயல்படுவது குறித்து இப்போதும் கூற விரும்பவில்லை" என்றுஇளங்கோவன் பதில் கூறினார்.