முதல்வர் பதவியை ஜெ. ராஜினாமா செய்வதாக வதந்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாததால் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அனுராதாதினகரன் அல்லது சரோஜாவை முதல்வராக்கத் திட்டமிட்டுள்ளதாக திடீர் வதந்தி பரவியது.

எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக்கப்படாமல் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இன்னும் 6மாதத்திற்குள் அவர் ஏதாவது ஒரு தொகுதியைத் தேர்ந்தெடுத்து அதில் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும்.

ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கு தடைவிதிக்கக் காரணமாக இருந்த டான்சி வழக்குவிசாரணை இன்னும் முடியவில்லை. இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 13ம் தேதிக்குள் ஜெயலலிதா எம்.எல்.ஏவாக வேண்டும். ஆனால் இந்த வழக்கில் இழுபறி நீடித்துவருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் என்றும், அந்த இடத்தில் ஒருபெண்ணையே நியமிக்க விரும்புகிறார் என்றும் ஒரு வதந்தி கிளப்பி விடப்பட்டது. இதற்காக சசிகலாவின் அக்காள்மகன் தினகரனின் மனைவி அனுராதா தினகரன் மற்றும் அமைச்சர் சரோஜா ஆகியோரது பெயர்கள் அடிபடுவதாகச்சொல்லப்பட்டது.

இந்த வதந்தி நேற்று (செவ்வாய்க்கிழமை) சென்னை முழுவதும் பரவி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது. நேற்று பிற்பகலில் கிளம்பிய இந்த வதந்தி திமுக வட்டாரத்திலும் பரபரப்பாகப்பேசிக்கொள்ளப்பட்டது.

அதிமுக எம்.எல்.ஏக்கள் அளவில் கூட இதுபற்றி இரகசியமாகப் பேசிக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.ஆனால், இதுகுறித்து அதிமுக தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லைஎன்பதால் இந்த வதந்தி நேற்று மாலையுடன் முடிவுக்கு வந்தது.

இதைக் கிளப்பிவிட்டது திமுகவினர் என்று சிலரும், அதிமுகவினர்தான் என்று சிலரும் கூறினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+