ஜெ. முதல்வரானதை எதிர்க்கும் வழக்கு விசாரணை இன்றும் தொடர்கிறது
டெல்லி:
ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா, தமிழக முதல்வராகப் பதவியேற்றதையும் அப்பதவியில்தொடர்ந்து நீடிப்பதையும் எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுக்களின் மீது, உச்ச நீதிமன்றத்தில் நேற்று(செவ்வாய்க்கிழமை) துவங்கிய விசாரணை, இன்றும் தொடர்ந்து நடக்கிறது.
எம்.எல்.ஏவாகத் தேர்ந்தெடுக்கப்படாத ஜெயலலிதா எந்த அடிப்படையில் முதல்வர் பதவி வகித்துவருகிறார் என்றவிளக்கம் கோரியும், அவர் முதல்வராக நீடிப்பதைத் தடுத்து உத்தரவிடக் கோரியும், வழக்கறிஞர் பி.ஆர் கபூர்,பிரதீப் சவுதாலா , தனஞ்செய் சவுதாலா செல்வராஜ் உள்ளிட்ட 6 பேர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
உச்ச நீதிமன்றம் இந்த மனுவை விசாரிக்கக் கூடாது என்று கோரி, ஜெயலலிதாவும் உச்ச நீதிமன்றத்தில் ஒருமனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த 2 மனுக்களின் மீதான விசாரணையும்,செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில், நீதிபதி பரூச்சா தலைமையிலான5 நீதிபதிகள் அடங்கிய "அரசியலமைப்பு பெஞ்ச்" முன்பு விசாரணைக்கு வந்தது. இவற்றில், ஜெயலலிதாவின் மனுநிராகரிக்கப்பட்டது.
மனுதாரரர்கள் பி.ஆர். கபூர், பிரதீப் சவுதாலா, தனஞ்செய் சவுதாலா, செல்வாஜ் ஆகியோர் சார்பில் ஆஜரானவழக்கறிஞர்கள், ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவர் முதல்வராக நீடிக்கக்கூடாது என்று வாதிட்டனர்.
அட்டர்னி ஜெனரல் சோலி சொராப்ஜியும் வாதிட்டார். இன்றும் வழக்கு விசாரணை தொடர்ந்து நபைெறுகிறது.சோலி சொராப்ஜி தனது வாதத்தை தொடர்ந்து நடத்துகிறார்.
ஜெயலலிதா முதல்வராகப் பதவி வகிக்கக் கூடாது என்று தொடரப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பை, இந்தியாவேபெரும் பரபரப்புடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.