காளிமுத்து முதல்வர் ஆவாரா?
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா தனது பதவியை ராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இருப்பினும் அவருக்கு அடுத்து யார் முதல்வர் என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் டான்சி வழக்கின் தீர்ப்பை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். ஆனால் அப்பீல்மனுவை விசாரிப்பதிலும் அரசு வக்கீல் வெங்கடபதி உருவத்தில் தடங்கல் ஏற்பட்டது.
தனக்கு போதுமான கால அவகாசம் தரவில்லை என்றும் ஆவணங்களை முழுமையாகப் படித்துப் பார்க்க அனுமதிதரவில்லை என்றும் கூறி விசாரணையைத் தொடரக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் ஸ்டே வாங்கி விட்டார்வெங்கடபதி. இந்நிலையில், டான்சி வழக்கின் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாகக்கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இப்போதைய சட்ட சிக்கல்கள் பெரிதாகும் முன் பதவி விலகுவதே நல்லது என்று அவருக்கு சில முக்கிய புள்ளிகள்ஆலோசனை கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. அவர்களது ஆலோசனையை ஏற்று தனது பதவியை ராஜினாமாசெய்ய ஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஒருவேளை ஜெயலலிதா ராஜினாமா செய்தால், முதல்வர் பதவிக்கு யார் தேர்வு செய்யப்படுவர் என்பதில் குழப்பம்நிலவுகிறது. இப்போதைய அமைச்சர்களில் யாருக்கும் முதல்வர் பதவி கிடைக்காது என்று கூறப்படுகிறது.
பொன்னையன் மட்டுமே இப்போதைய அமைச்சர்களில் சீனியர், அனுபவம் வாய்ந்தவர். இருப்பினும் முதல்வர்பதவி என்பது கொஞ்சம் சூடான பதவி என்பதால் அதை சமாளிக்கும் திறன் அவருக்கு இருக்கிறதா என்பதுசந்தேகமே.
பெரும்பாலும் சபாநாயகர் காளிமுத்துவுக்கு முதல்வர் பதவி கிடைக்கலாம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது. அவரைமுதல்வராக்கி விட்டு சபாநாயகர் பொறுப்பை அமைச்சர் பொன்னையன் அல்லது ஜெயக்குமாரிடம் கொடுக்கஜெயலலிதா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் எது முதலில் நடக்கும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.