பஸ்சில் பயணம் செய்த இளைஞர் லாரி உரசி சாவு
கீழவேளூர்:
வேளாங்கண்ணிக்கு நடைபயணமாக சென்று பிரார்தனையை செலுத்தி விட்டு பஸ்சில் வீடு திரும்பிய வாலிபர்தலை மீது லாரி உரசியதில் அவர் தலை நசுங்கி உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகேயுள்ளது மாணிக்கபுரம் கிராமம். அங்கு வசித்து வரும் அந்தோணிசாமிஎன்பவரின் மகன் செல்லதுரை (வயது 30). இவர் தனது ஊரைச் சேர்ந்த 30 பேருடன் வேளாங்கண்ணிக்கு நடந்துசென்று அன்னை மேரியை தரிசித்துவிட்டு, ஒரு அரசு பஸ் மூலம் திருச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
கீழவேளூர் அருகேயுள்ள கடம்பனூர் சாலையில் பஸ் வந்து கொண்டிருந்த போது திருவாரூரிலிருந்துநாகப்பட்டினம் நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த மினி லாரி ஒன்று பஸ் மீது உரசியது.
பஸ்சின் ஜன்னல் அருகே அமர்ந்து தலையை வெளியே நீட்டியபடி பயணம் செய்து கொண்டிருந்த செல்லதுரையின்தலையை வேகமாக வந்த லாரி உரசியது. லாரி வேகமாக உரசியதால் செல்லதுரை தலை நசுங்கி மூளை சிதறிபஸ்சிலேயே இறந்து போனார்.
பஸ்சை உரசிய மினி லாரி நிற்காமல் விரைந்து சென்றுவிட்டது. இது குறித்து கீழ வேளூர் காவல் நிலையத்தில் புகார்கொடுக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மினி லாரியை தேடி வருகிறார்கள்.
செல்லதுரையின் உடல் பிரேத பரிசோதனைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.