ஜெ.க்கு ஆதராவாக உயர் நீதிமன்றத்தில் மனு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற சட்டத் திருத்தத்தைதடைசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் பட்டுள்ளது.

சென்னை தி.நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது,

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி அனைவருக்கும் அரசியல் துறை, சமூக நீதி மற்றும் பொருளாதாரத்துறைகளில் சமஉரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சட்டமன்ற உறுப்பினராக யாரெல்லாம் ஆகமுடியாது என்றும்அதில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி மனவளர்ச்சி குன்றியவர்கள், மஞ்சள் நோட்டீசு கொடுத்தவர்கள் மற்றும் இந்தியர் அல்லாதோர்ஆகியோர் தான் உறுப்பினராக முடியாது. இது இந்திய அரசியலமைப்புச் சட்டம் 14 வதுபிரிவில்குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தம் 8(4) ன் படி 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனைபெற்றவர்கள் தேர்தலில்போட்டியிட முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் சாட்சிகளின் அடிப்படையில் குற்றமே செய்யாதவர் தண்டனை பெறவும் வாய்ப்புண்டு. மேலும்பட்டப் பகலில் கொலை செய்யும் கொலைக் குற்றவாளி கூட சாட்சிகள் இல்லாததால் தண்டனை இல்லாமல்தப்பிக்கவும் வாய்ப்புண்டு.

எனவே தண்டனையின் அடிப்படிடையில் தேர்தலில் போட்டியிடுவதைத் தடைசெய்யும் சட்டத்திற்கு தடைவிதிக்கவேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நாராயண குரூப் மற்றும்ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இந்த வழக்கை வரும் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+