For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காவிரி பிரச்சனை: டெல்லியில் இன்று கண்காணிப்புக் குழு கூட்டம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில்தமிழகத்திற்கு காவிரி நீர் திறந்துவிடுவது குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படும்.

தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்ட காரணத்தால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது. காவிரிடெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள குறுவை பயிர்களுக்கு பாசனத்திற்காக நீர் திறந்து விடுவதில் சிக்கல்ஏற்பட்டது.

காவிரி நதிநீர் ஆணையத்தின் நடுவர் குழு பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி கர்நாடகமும் நீர்திறந்துவிடவில்லை. இதனால் சிக்கல் மேலும் அதிகமானது.

மேட்டூர் அணையில் குறைந்த அளவு நீர் இருந்தாலும் பயிர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக மேட்டூர்அணையிலிருந்து கடந்த 2 மாத காலமாக பாசனத்திற்காக நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காவிரி நதிநீர் ஆணையத்தின கண்காணிப்பு குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் பிரதமர் வாஜ்பாய்க்குகடிதம் எழுதினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

காவிரி விஷயத்தில் மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது என்றும் ஜெயலலிதா குற்றம் சாட்டினார். இந்நிலையில்செப்படம்பர் 6ம் தேதி காவிரி கண்காணிப்புக் குழு கூட்டம் கூட்டப்படும் என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர்கூறியிருந்தார்.

இதற்கிடையே காவிரியில் நீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாக முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கும் கடிதம்எழுதினார் ஜெயலலிதா.

இது குறித்து தமிழக-கர்நாடக அதிகாரிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த அனுமதி கேட்டும் ஜெயலலிதாகடிதம் எழுதினார். ஜெயலலிதாவின் கோரிக்கையை கர்நாடக அரசு ஏற்றுக் கொண்டது. பேச்சுவார்த்தைக்கானதேதியை விரைவில் அறிவிப்பதாக ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதினார் கர்நாடக முதல்வர் கிருஷ்ணா.

இந் நிலையில் மத்திய நீர் வள அமைச்சர் கூறியபடி இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் காவிரி கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் பாண்டிச்சேரி ஆகிய 4மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.

தமிழகத்தின் சார்பில், தமிழக தலைமைச் செயாலாளர் சங்கர், பொதுப்பணித்துறை செயலாளர் குற்றாலிங்கம்,தலைமை பொறியாளர் சிவராமன், காவிரி தொழில் நுட்பக் குழுவின் தலைவர் மோகன கிருஷ்ணன் ஆகியோர்கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தின் போது தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நீரின்றி வாடுவதால்,காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் வற்புறுத்துவார்கள்.

கர்நாடகாவிலும் வறட்சி நிலவி வருவதாக, அம்மாநிலம் கூறி வருவதால், அவர்களும் தங்கள் நிலை குறித்துஎடுத்துக் கூறுவார்கள்.

இந்தக்கூட்டத்திற்கு பின்தான் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படுமா என்பது குறித்து தெரியவரும்.

மேட்டூர் அணையில் உள்ள நீரின் அளவு இன்னும் 2 வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X