குற்றவாளிகள் போட்டியிடலாமா? - உயர் நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு
சென்னை:
நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டசபையிலோ உறுப்பினராக இருந்தாலும் கூட குற்ற வழக்கில் தண்டனைவிதிக்கப்பட்டால் அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னைஉயர்நீதிமன்றத்தில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுதெளிவாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் அதே சட்டத்தின் 8-வது பிரிவின் 3-வது உட் பிரிவில் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாகஇருப்பவர்கள் குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டாலும் தேர்தலில் போட்டியிட முடியும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விதி மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு புறம்பாகவும், முரண்பாடாகவும் உள்ளது. எனவே இந்த சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும்.
குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் நாடாளுமன்றம் அல்லது சட்டசபையில் உறுப்பினர்களாக இருந்தாலும் கூடதேர்தலில் போட்டியிட முடியாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதிகள் நாராயண குரூப் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் வழக்கின் அடுத்த கட்டவிசாரணையை வரும் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.