காவிரி பிரச்சனை: நல்ல முடிவு ஏற்படும் - கருணாநிதி நம்பிக்கை
சென்னை:
இன்று (வியாழக்கிழமை) கூடவிருக்கும் காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில் நல்ல முடிவு எடுப்பார்கள் என்றுநம்புவோம் என்று முன்னாள் முதல்வரும் தி.மு.க. தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வாடி வரும் பயிர்களை காப்பாற்ற காவிரி கண்காணிப்பு குழுவில் நல்ல முடிவு எடுப்பார்கள் என்றுஎதிர்பார்ப்போம்.
மேட்டூருக்கு 205 டி.எம்.சி நீரை கர்நாடக அரசு ஒப்புக் கொண்டு ஆணையம் அமைத்த பின்னரும் பிரச்சனைகள்ஏற்பட்டது.
அப்போதெல்லாம் ஆணையத்தின் தலைவராக உள்ள பிரதமரை சந்தித்து கண்காணிப்புக் குழு கூட்டங்களும்,ஆணைய கூட்டங்களும் நடத்த எங்கள் கழக ஆட்சி ஏற்பாடு செய்தது. கூட்டங்கள் நடத்தப்பட்டு பிரச்சனைகள்விவாதிக்கப்பட்டு, முடிவுகளும் எட்டப்பட்டன.
தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள பயிர்கள் காய்ந்து, கருகிக் கொண்டிருக்கும் இன்றையசூழ்நிலையில், அந்த முயற்சி தொடர இன்றைய தமிழக அரசும், பிரதமரும் எல்லா நடவடிக்கையும் எடுக்கவேண்டும்.
ஆணையத்தின் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ள மாநில அரசுகளின் பிரதிநிதிகள் மனம் விட்டுப் பேசி, நல்லமுடிவு எடுப்பார்கள் என்று எதிர்பார்ப்போம் என்று அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications