கருணாநிதியை கைது செய்ய முஸ்லிம் அமைப்பு கோரிக்கை
கோயம்புத்தூர்:
சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளை கொடுமைப்படுத்தி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தஉத்தரவிட்ட முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இந்த வழக்கில் தவறாக குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி முஸ்லிம்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றுசிறுபான்மையினர் சட்ட உதவி மையம் என்ற அமைப்பைச் சேர்ந்த 80 பெண்கள் உட்பட 150 பேர்கோயம்புத்தூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டம் கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான முகமது அன்சாரியுடையமனைவியின் தலைமையில் நடைபெற்றது. இவர்கள் தங்கள் 13 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மனு ஒன்றையும்மாவட்ட ஆட்சி தலைவரிடம் கொடுத்தனர்.
தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதிகளை கொடுமைப்படுத்தி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியமுன்னாள் முதல்வர் கருணாநிதி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எந்த விதமான விசாரணையும் நடத்தப்படாமல் சிறையில்அடைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும்.
பலர் மீதும் பொய்யான வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 13கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கொடுத்தனர்.