ஜெ. ராஜினாமா செய்ய வேண்டும்: வைகோ
திருச்சி:
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா தன் பதவியை ராஜினாமா செய்வதைத் தவிரவேறு வழியே இல்லை என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
வியாழக்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, தண்டிக்கப்பட்டவர்கள் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும்என்றால் பிறகு சட்டம், விதிமுறைகள் போன்றவை தேவையில்லையே, அதற்கான அவசியம் என்ன உள்ளது என்றுவினா எழுப்பியுள்ளார் ஒரு நீதிபதி.
இதுகுறித்து திருச்சியில் நிருபர்களிடம் வைகோ கருத்து கூறியபோது,
இந்த கேள்வி மிகவும் கடுமையானது. முதல்வர் ஜெயலலிதா இதற்குப் பிறகும் பதவியில் நீடிப்பது அழகல்ல.உடனடியாக அவர் பதவியை ராஜினாமா செய்வதே நல்லது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பை விரைவில் எதிர்பார்க்கிறோம். நிச்சயம் நல்ல தீர்ப்புவெளிவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
மத்திய அமைச்சரவையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இடம் கொடுக்காதது குறித்து கருத்து கூறுவதற்கில்லை. இதுமுற்றிலும் பிரதமரின் உரிமை. இதில் யாரும் கேள்வி கேட்க முடியாது.
எங்களது இரண்டு அமைச்சர்களும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். இதை அங்கீகரித்து அவர்களை பணியில்தொடர பிரதமர் வாஜ்பாய் அனுமதித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்வைகோ












Click it and Unblock the Notifications