ஆறுதல் கூறிய உள்ளங்களுக்கு ஜி.கே. வாசன் நன்றி
சென்னை:
மூப்பனாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தவர்கள் மற்றும் அவரது இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு மூப்பனாரின் மகனும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவருமான கோவிந்தவாசன் நன்றிதெரிவித்துள்ளார்.
மக்கள் தலைவரும் எனது தந்தையுமான மூப்பனார் மறைவுற்றபோது துயரத்தில் இருந்த எங்களதுகுடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய தமாகா தொண்டர்கள், பொதுமக்களுக்கு நன்றி.
எனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு வருகை வந்த துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்த், சோனியாகாந்தி, தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுக்கு எனது நன்றிகள்.
தமாகாவின் தலைமைப் பொறுப்பை என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கு என் தந்தை மீது தொண்டர்கள்வைத்திருக்கும் நம்பிக்கைதான் காரணம்.
எனது தகுதி காரணமாக இப்பதவி வரவில்லை. எனவே நிச்சயம் தொண்டர்களின் நம்பிக்கையைக் கட்டிக் காக்கும்வகையில் நடந்து கொள்வேன் என்றும் அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications