காவிரி: அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது
சென்னை:
காவிரி நீர் பிரச்சனை பற்றி விவாதிப்பதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம், முதல்வர் ஜெயலலிதா தலைமையில்,சென்னையில் இன்று (சனிக்கிழமை) மாலை 4 மணிக்குத் தொடங்கியது.
இதில் கலந்து கொள்வதற்காக, அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழக தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் சனிக்கிழமைமாலை 4 மணிக்கு இந்தக் கூட்டம் தொடங்கியது.
திமுக சார்பில் அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்ட தலைவர்களும், தமாகா சார்பில் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம்உள்ளிட்ட தலைவர்களும் மற்றும் பல கட்சித் தலைவர்களும் இக்கூட்டத்தில கலந்து கொண்டுள்ளனர்.
காவிரியில் நீர் திறந்து விடுவது தொடர்பாக, கர்நாடகத்தை எந்த வகையில் அணுகுவது என்பது குறித்து,இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழக மக்களின் - குறிப்பாக விவசாயிகளின் - முக்கியப் பிரச்சனையாக காவிரி நீர் பிரச்சனை இருப்பதால்,அரசியல் கருத்து வேறுபாடுகள் அனைத்தையும் மறந்துவிட்டு, சுமூகமான ஒரு முடிவு இக்கூட்டத்தில் எடுக்கப்படும்என்று தமிழகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
சிக்கலான அரசியல் சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ள ஜெயலலிதாவும், இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகளின்நலனுக்கான ஒரு தெளிவான முடிவை எடுப்பார் என்றும் நம்பப்படுகிறது. அவரும் எதிர்க்கட்சிகளின் சிறந்தஆலோசனைகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.
தமழகம் எப்போதுமே தண்ணீர் பிரச்சனையால் அல்லாடிக் கொண்டிருப்பதால், அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து,இக்கூட்டத்தின் மூலம் ஒரு நல்ல முடிவை - அதிலும் நிரந்தர முடிவை - எடுப்பார்கள் என்று அனைவரும்எதிர்பார்க்கின்றனர்.
"இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை திமுக ஆதரிக்கும்" என்று அக்கட்சியின் தலைவரும் முன்னாள்முதல்வருமான கருணாநிதி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.