காஷ்மீர்: கண்ணி வெடியில் சிக்கி 6 ராணுவத்தினர் பலி

Subscribe to Oneindia Tamil

உதாம்பூர்:

காஷ்மீர்-உதாம்பூர் மாவட்டத்தில் கண்ணி வெடியில் சிக்கி ஒரு ராணுவ கமாண்டர் உள்பட 6 எல்லைப் பாதுகாப்புப்படை (பி.எஸ்.எப்) வீரர்கள் கொல்லப்பட்டனர். 3 வீரர்கள் காயமடைந்தனர்.

ஜம்முவிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தாம்குண்ட் பகுதியில், ஜீப் ஒன்றில் ராணுவ கமாண்டர்சென்று கொண்டிகுந்தார். அவருக்குப் பாதுகாப்பாக பி.எஸ்.எப். வீரர்கள் வாகனமும் சென்று கொண்டிருந்தது.

கமாண்டரின் ஜீப் தீவிரவாதிகள் வைத்திருந்த கண்ணி வெடியை தாண்டும் போது, சற்றுத் தொலைவில்பதுங்கியிருந்த தீவிரவாதிகள், ரிமோட் கண்ட்ரோல் மூலம் கண்ணி வெடியை வெடிக்கச் செய்தனர்.

இதையடுத்து, கண்ணி வெடி பெரும் சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் ஜீப்பில் சென்று கொண்டிருந்தஅனைவரும் கொல்லப்பட்டனர்.

தாக்குதலுக்குள்ளான ஜீப் சுக்குநூறாக சிதறியது. இறந்தவர்களின் உடல்கள் சுமார் 30 மீட்டர் தூரம் வரை தூக்கிஎறியப்பட்டது.

போலீசார் வெடிவிபத்து நடந்த இடத்தைச் சுற்றி வளைத்துள்ளனர். வெடிவிபத்துக்கு காரணமான தீவிரவாதிகளைதேடும் பணி தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஹிஜ்புல் முஜாஹுதின் என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.காயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை ராணுவ வீரர்கள் சென்ற பஸ்சின் மீது தீவிரவாதிகள் கண்ணி வெடியை ரிமோட்கண்ட்ரோல்மூலம் வெடிக்க வைத்ததில் பஸ்சில் பயணம் செய்த ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+