For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஷச்சாராய சாவு 13 ஆக உயர்வு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அம்பத்தூர் அருகே விஷச் சாராயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

அம்பத்தூர் அருகே மீனம்பேடு என்ற பகுதியில் கல்யாண வரவேற்புக்கு வந்திருந்தவர்கள் ஆந்திராவிலிருந்துகொண்டு வந்திருந்த விஷச் சாராயத்தை அருந்தியதில் 13 பேர் சுருண்டு விழுந்து இறந்தனர்.

இந்த சம்பவம் சட்டசபையில் சனிக்கிழமை எதிரொலித்தது. இதுகுறித்து உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்குமாநில வருவாய்த்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பதிலளிக்கும்போது கூறியதாவது:

பெண் வீட்டைச் சேர்ந்த சிலர் ஆந்திராவிலிருந்து எரிசாராயத்தை வாங்கிக் கொண்டு வந்துள்ளனர். வரவேற்புநிகழ்ச்சிக்குப் பின் நள்ளிரவில் அவர்கள் அதை அருந்தியுள்ளனர்.

மொத்தம் 20 பேர் வரை இதை அருந்தியுள்ளனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். 4 பேர் ஆபத்தான நிலையில்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இறந்தவர்களில், மாசிலாமணி மற்றும் டில்லி ஆகிய 2 பேரும் கள்ளச் சாராய வியாபாரிகள். அவர்களும் அதேஎரிசாராயத்தையே குடித்து உயிரிழந்தனர். ஆந்திராவிலிருந்து எப்படி எரிசாராயம் கடத்தி வரப்பட்டது என்பதுகுறித்து போலீஸ் விசாரணை நடந்து வருகிறது என்றார்.

இதற்கிடையே, தங்களுக்கும், எரிசாராயக் கடத்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று திருமண வீட்டைச்சேர்ந்த பெண் வீட்டார் மறுத்துள்ளனர். அவர்கள் கூறுகையில்,

இப்பகுதியில் நீண்டகாலமாகவே எரிசாராய விற்பனை உள்ளது. பல கள்ளச்சாராய வியாபாரிகள் இதில்ஈடுபட்டுள்ளனர். போலீஸாருக்கும் அவர்களுக்கும் நல்ல தொடர்பு உள்ளது.

இந்நிலையில் எரிசாராய விற்பனை குறித்து வெளியே தெரிந்து விட்டால், தங்களுக்குப் பிரச்சனை ஏற்படும்என்பதால் எங்கள் மீது போலீஸார் குற்றம் சுமத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே சாராயம் குடித்து இறந்தவர்களின் உறவினர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்குவிந்துள்ளனர். சாராயத்தால் இறந்த தங்களது உறவினர்களின் உடல்களைப் பெற்றுக் கொள்ளும் போது அவர்கள்கதறி அழுதது உருக்கமாக இருந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X