கூடங்குளம் அணு உலை கட்டும் பணிகள் அடுத்த மாதம் ஆரம்பம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கூடங்குளம் அணுமின் நிலையத்தில், அணு உலை கட்டும் பணி அடுத்த மாதம் துவங்கும் என்று இந்திய அணுசக்தித் துறை இயக்குனர் ஆர்.பி. குரோவர் கூறினார்.
அணுசக்தி துறை மூலம் 2020ம் ஆண்டு சுமார் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டம் உள்ளது.அதனை இலக்காக கொண்டு அணுசக்தி துறை செயல்பட்டு வருகிறது.
நம்நாட்டு தொழில் நுட்பத்தின் அடிப்படையிலேயே இது தயாரிக்கப்பட உள்ளது. இதற்கான ஆராய்ச்சி நடந்துவருகிறது.
கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் முடிவடையும் தருவாயில் உள்ளது.வருகிற அக்டோபர் மாதம் அணு உலை கட்டும் பணி துவங்கவுள்ளது என்றார் குரோவர்.












Click it and Unblock the Notifications