For Daily Alerts
Just In
சென்னையில் கடலில் மூழ்கி 3 பேர் பலி
சென்னை:
சென்னையில் கடலில் குளிக்கச் சென்ற 3 இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
சென்னை துறைமுகம் பகுதியில் கடலில் மூழ்கி இறந்த 2 இளைஞர்களின் சடலங்கள் கரையோரம் ஒதுங்கின.இவற்றைப் போலீசார் கைப்பற்றி அவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை பெசன்ட் நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன் அன்னை மேரியின் திருவிழா நடந்தது. அதில் கலந்துகொள்ள வந்த இளைஞர்கள் சிலர், அங்குள்ள எலியட்ஸ் கடற்கரை அருகே கடலில் குளித்தனர்.
அப்போது அவர்களில் 4 பேரை நடுக்கடலுக்கு இழுத்துச் சென்றது அலை. இதையறிந்த பொதுமக்கள் சிலர்அவர்களில் 3 பேரைக் காப்பாற்றிக் கரைக்கு இழுத்து வந்து காப்பாற்றினர். அவர்களில் ஒருவர் நீரில் மூழ்கி, மூச்சுத்திணறி பலியானார்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Comments
Story first published: Sunday, September 9, 2001, 5:30 [IST]