For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி பிரச்சனை: டெல்லியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காவிரியிலிருந்து தமிழகத்திற்குத் தண்ணீர் விடக் கோரி கர்நாடகத்தை வற்புறுத்துமாறு பிரதமரிடம்வலியுறுத்துவதற்காக, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் தலைமையில் அனைத்துக் கட்சித்தலைவர்கள் அடங்கிய குழு டெல்லி சென்றுள்ளது.

சனிக்கிழமை சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள்கூட்டத்தின்போது, டெல்லிக்குச் சென்று பிரதமர் வாஜ்பாயைச் சந்திப்பது என்று முடிவானது.

இதையடுத்து அமைச்சர் தளவாய் சுந்தரம் தலைமையிலான முதல் குழு ஞாயிற்றுக்கிழமை இரவு தமிழக அனைத்துக்கட்சித் தலைவர்கள் அடங்கிய குழு டெல்லி சென்றது.

கல்வி அமைச்சர் தம்பிதுரை தலைமையிலான மற்றொரு குழுவினர் திங்கள்கிழமை காலை டெல்லி புறப்பட்டுச்சென்றனர்.

இவர்கள் அனைவரும், திங்கள்கிழமை மாலை பிரதமர் வாஜ்பாயைச் சந்திக்கின்றனர். கர்நாடகத்தை தண்ணீர்திறந்து விடுமாறு வலியுறுத்துமாறு பிரதமரிடம் அப்போது அவர்கள் கேட்டுக் கொள்வர்.

தமிழக குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்:

அதிமுக: தளவாய் சுந்தரம், தம்பித்துரை, பி.எச்.பாண்டியன், மலைச்சாமி, தினகரன், செளந்தரராஜன், முருகேசன்,நிறைகுளத்தான், டாக்டர் சரோஜா, எஸ்.எஸ்.சந்திரன், காளியப்பன், கோகுல இந்திரா, குமாரசாமி, காமராஜ்.

திமுக: அசோகன்.

காங்கிரஸ்: சுதர்சன நாச்சியப்பன், மணி சங்கர் அய்யர்.

தமிழ் மாநில காங்கிரஸ்: எஸ்.ஆர். பாலசுப்ரமணியம், ஞானதேசிகன்.

பாரதீய ஜனதாக் கட்சி: கிருபாநதி, சி.பி.ராதாகிருஷ்ணன், டாக்டர் மாதன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்: மோகன், வரதராஜன்.

இந்திய கம்யூனிஸ்ட்: ஆர். நல்லக்கண்ணு.

அரசியல் கட்சிகள் தவிர காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகளும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X