சென்னை-கோட்டை ரயில் நிலையத்தில் கொள்ளை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையிலுள்ள கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள பதிவு அலுவலகத்தில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலைநுழைந்த ஒரு மர்மக் கும்பல் ரூ.10,000 பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது.
பின்னர், அங்கிருந்த பதிவு அலுவலகத்தில் நுழைந்து, ரூ.10,000 தொகையைக் கொள்ளையடித்தது.காவலாளியிடமிருந்த பணத்தையும் அக்கும்பல் எடுத்துக் கொண்டு ஓடிவிட்டது.
பின்னர் அதிகாலை 3 மணிக்கு அங்கு வந்த பயணிகள், காவலாளியின் கூக்குரலைக் கேட்டு, ஓடிச் சென்று அவரைக்காப்பாற்றினர்.
இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னையின் முக்கியப் பகுதியான கோட்டை ரயில் நிலையத்தில்கொள்ளை நடந்திருப்பது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications