கடலூரில் தொடரும் தீ - 4 பேர் பிடிபட்டனர்
கடலூர்:
கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார் பகுதிகளில் திடீர் தீ வைப்பு சம்பவங்களுக்கு காரணமான4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்மனுக்குச் செய்த நேர்த்திக் கடன் குறைவாகத்தான், இந்தத் தீ விபத்துக்கள் ஏற்படுகின்றன என்று மக்கள்ஆரம்பத்தில் கருதி வந்தனர்.
ஆனால், தொடர்ந்து வந்த சில டெலிபோன் தகவல்கள் பொதுமக்களை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கின.டெலிபோனில் பேசும் மர்ம ஆசாமி, திடீரென குரலை மாற்றி, "இன்னும் சற்று நேரத்தில் உங்கள் பகுதியில் வீடுஎரியப் போகிறது" என கூறிவிட்டு வைத்து விடுவாராம்.
இதையடுத்து, மக்களின் மூட நம்பிக்கைகள் மறைந்து, டெலிபோன் போடுவர் யார் என்று தேடும் முயற்சியில்அவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்து பீதி காரணமாக ஏராளமானோர் வீடுகளை மற்றும் பொருட்களை இழந்து தவித்து வந்தனர்.மேலும், இரவு நேரங்களில் வீட்டுக்குள் படுத்து உறங்காமல், வீட்டை விட்டு வெளியே படுத்து உறங்கும் நிலைக்குதள்ளப்பட்டுள்ளனர்.
இருப்பினும், அந்தந்த கிராமத்தில் உள்ள வாலிபர்கள் ஒருங்கிணைந்து தடி, வீச்சரிவாள் போன்ற பயங்கரஆயுதங்களுடன் இரவு நேரங்களில் ரோந்து வந்தனர். பதட்டமான பகுதிகளில் ஏராளமான போலீசார்குவிக்கப்பட்டனர்.
ஆனால் மர்ம தீ விபத்து தொடர்கதையாகி வந்தது. இதையடுத்து, "கிராமத்தில் உள்ள வாலிபர்கள் உருட்டுகட்டைகளுடன் யாரும் சுற்றி வரவேண்டாம்" என போலீஸ் எஸ்.பி. எச்சரிக்கை விடுத்தார். இதைத் தொடர்ந்து,இந்த மர்மத் தீ விபத்து எப்படி ஏற்படுகிறது என்பது குறித்து போலீசார் ரகசியமாகவும் தீவிரமாகவும் கண்காணித்துவந்தனர்.
இந்நிலையில், தெற்கு கொளக்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரையும், அங்சாபுலி என்பவரையும்போலீசார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். இந்த 2 பேரும் அதே ஊரை சேர்ந்த ராஜவேலு என்பவரது வீட்டிற்குதீ வைக்கும் போது கையும் களவுமாக பிடிபட்டனர்.
ஆனால், போலீஸ் விசாரணையின்போது, "கிராமத்தில் ஒரு பரபரப்பு ஏற்படுத்துவதற்காகத்தான் வீடுகளுக்கு தீவைத்தோம்" என்று அந்த 2 பேரும் தெரிவித்துள்ளனர்.
அதேபோல, புத்தூர் அருகே உள்ள தெற்கு விருத்தாங்க நல்லூர் கிராமத்தை சேர்ந்த பஞ்சாச்சரமும் அவரதுமனைவியும், தங்கள் வீட்டில் உள்ள பொருட்களை அப்புறப்படுத்திவிட்டு அவர்களே தங்கள் வீட்டுக்குத் தீவைக்கும்போது பிடிபட்டனர். "அரசு உதவி பெறுவதற்காகத்தான் எங்கள் வீட்டுக்கு நாங்களே தீ வைத்தோம்" என்றுகூறியுள்ளனர்.
இதையடுத்து இன்னும் ஒரிஜினல் குற்றவாளிகள் பிடிபடவில்லை. போலீசார் தொடர்ந்து வலை வீசி அவர்களைத்தேடி வருகிறார்கள். பொதுமக்களும் இன்னும் சரியாக உறங்காமல், இரவெல்லாம் "கொட்டக் கொட்ட" முழித்துக்கொண்டிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications