சென்னையில் விமானப்படை, பாராசூட் வீரர்கள் சாகசம்
சென்னை:
தாம்பரம் விமானப் படை தளத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிநடைபெற்றது. மயிர்க்கூச்செரிய வைக்கும் பல சாகசங்களை விமானப்படை வீரர்கள் செய்து காட்டி, மக்களைபிரமிப்பில் ஆழ்த்தின.
இந்த நிகழ்ச்சியைக் காண முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். விமானப்படைஅதிகாரிகள், அவர்கள் குடும்பத்தினர், பல பள்ளி-கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், பல சங்கங்களைச்சேர்ந்தவர்கள் விமானப்படை மைதானத்தில் குழுமியிருந்தனர்.
காலை 10.15 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. இதில் 8 குட்டி விமானங்களும் 1 பெரிய விமானமும் கலந்துகொண்டன.
முதலில் ஒரு பெரிய விமானம் மேலே சென்றது. அதைத் தொடர்து குட்டி விமானங்கள் இரண்டு இரண்டாகஜோடியாக மேலே பறந்து சென்று, விண்ணில் ஆல்ஃபா வடிவில் பறந்து சென்று, பார்வையாளர்களைப் பிரமிக்கச்செய்தன.
பின்னர், இவை ஆங்கில எழுத்து "டி" வடிவத்தை விண்ணில் அமைத்துக் காட்டி, பார்வையாளர்ளை மகிழ்ச்சியில்ஆழ்த்தின. இதன் பின், டைமன்ட் வடிவத்தில் பறந்து சென்றபோது, பார்வையாளர்கள் கைதட்டி ஆரவாரம்செய்தனர்.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பதை "செட்டக்"ஹெலிகாப்டர் வீரர்கள் செய்து காட்டினர். வங்கதேசப் போரில் பயன்படுத்தபட்ட விமானத்தின் மூலம், கயிறுகளில்இறங்கி போரிட்ட காட்சியை செய்து காட்டினர்.
இதையடுத்து உச்ச கட்டமாக 6,000 அடி உயரத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்து மயிர்க்கூச்செரிய வைத்தனர்.பறந்து கொண்டிருந்த விமானத்திலிருந்து, 12 வீரர்கள் பாராசூட் மூலம் குதித்தனர். பாரசூட் குடை விரித்து அழகாகதரையிறங்கியது.
தேசிய கொடியின் மூன்று நிறங்களிலும் வடிவமைக்கப்பட்ட பாராசூட்டுகள் தரையிறங்கின. 4 பேர் ஜோடிஜோடியாக தரையிறங்கினர். ஒருவர் மட்டும் தனியாக தரையிறங்கினார்
இந்த நிகழ்ச்சி நண்பகல் 12 மணிக்கு முடிவடைந்தது.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications