என்ன செய்யப் போகிறது புதிய நீதிக் கட்சி?
சென்னை:
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது பிறந்த ஜாதிக் கட்சியான புதிய நீதிக் கட்சி வரும் உள்ளாட்சித் தேர்தலில்தனித்துப் போட்டியிடும் அல்லது அதிமுக கூட்டணியில் சேர்ந்து போட்டியிடும் என்று தெரிகிறது.
கூட்டத்தில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது, எத்தனை இடங்களில் போட்டியிடுவது, வெற்றி வாய்ப்புஎப்படி இருக்கிறது, எத்தனை இடங்கள் தேறும் என்பது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதம் நடந்தது.
கூட்டத்திற்குப் பின் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 15ம் தேதி நடக்கிறது. அக்கூட்டத்திற்குப் பின் கூட்டணி அமைத்துப்போட்டியா அல்லது தனித்துப் போட்டியா என்பதுகுறித்து தெரிய வரும்.
ஜெயலலிதாவின் டான்சி அப்பீல் வழக்கில் அரசுத்தரப்பு வக்கீலாக ஆஜராகியிருக்கும் வெங்கடபதி திமுகவைச்சேர்ந்தவர். திமுக ஆட்சிக்காலத்தில் அட்வகேட் ஜெனரலாக இருந்தவர். திமுக உறுப்பினரும் கூட.
எனவே, இந்த வழக்கில் யார் பின்னணியில் உள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும் ஜெயலலிதாஇந்தவழக்கில் வெற்றி பெற்று வெளியே வருவார் என்றார் சண்முகம்.
சண்முகத்தின் பேச்சை வைத்துப் பார்க்கும் போது அதிமுக கூட்டணிக்கு அக்கட்சி முயற்சிப்பதாக தெரிகிறது.ஆனால் அவர்களை சேர்க்கும் மன நிலையில் அதிமுக இல்லை என்றும் கூறப்படுகிறது.
தெளிவான கொள்கை, நிலையான வாக்கு வங்கி எதுவும் இல்லாத புதிய நீதிக் கட்சியை கூட்டணியில் சேர்ப்பதால்கூட்டணிக்குத்தான் கெடுதல் என்று அதிமுக வட்டாரத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மதச்சார்பற்றகூட்டணியாக உள்ள அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சி கால் வைத்தால், அது கூட்டணித்தத்துவத்தையேகுலைத்து விடும் என்றும் யோசிக்கப்படுகிறது.
எனவே அதிமுக கூட்டணிக்கு கனவு கண்டிருக்கும் ஏ.சி. சண்முகத்தின் திட்டம் பலிக்காது என்றே கூறப்படுகிறது.இதனால் தனித்துப் போட்டியிடுவது குறித்து புதிய நீதிக் கட்சித் தலைவர்கள் யோசித்துக் கொண்டிருப்பதாகத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications