பென்சில்வேனியாவில் 4-வது விமானம் மோதல்
கடத்தப்பட்ட 4வது விமானம் பிட்ஸ்பர்க்கில் இருந்து 80 மைல் தொலைவில் பென்சில்வேனியாவில் மோதிநொறுங்கி விழுந்தது.
கடத்தப்பட்ட 4 விமானங்களில் 2 விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது தாக்கின.மற்றொன்று வாஷிங்டன் அருகே உள்ள பென்டகன் என்ற அந்நாட்டுப் பாதுகாப்புத் தலைமையகத்தின் மீதுதாக்கியது.
கடத்தல்கார்ரகளால் கடத்தப்பட்ட இந்த 4வது விமானமும் நியூயார்க்கிலிருந்து வாஷிங்டனை நோக்கிச் சென்றது.இதையடுத்து வாஷிங்டனில் பெரும் அச்சம் பரவியது. இந்த விமானத்தை விரட்டிக் கொண்டு அமெரிக்க போர்விமானங்கள் விரைந்தன.
அடுக்கு மாடிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்த விமானம் எங்கு வந்துமோதுமோ எனத் தெரியாமல் அனைவரும் வானை நோக்கியபடி இருந்தனர்.
வாஷிங்டனில் தான் அந்நாட்டின் அதிபர் மாளிகையான உலகப் புகழ் பெற்ற வெள்ளை மாளிகை இருக்கிறது.அந்த கட்டிடத்தில் அதிபர் மாளிகை தவிர துணை அதிபரின் மாளிகை, அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும்பாதுகாப்புப் படைகளின் முக்கிய அலுவலகங்கள் உள்ளன.
அவற்றை தாக்கும் நோக்கத்தில் தான் 4வது விமானம் சென்று கொண்டிருப்பதாகக் கருதப்பட்டது.
இதையடுத்து வெள்ளை மாளிகையில் இருந்து அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்பட அனைவரும்வெளியேற்றப்பட்டனர். மேலும் அந்நகரின் முக்கிய கட்டிடங்கள் மற்றும் அலுவலகங்களும் காலி செய்யப்பட்டன.
ஆனால், இந்த 4வது விமானம் பென்சில்வேனியாவில் மோதி வெடித்துச் சிதறியது. தானாக மோதியதா அல்லதுஅமெரிக்க விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பது தெரியவில்லை.