கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக, கர்நாடக முதல்வர் கிருஷ்ணா இன்று அனைத்துக் கட்சிக்கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

காவிரி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று திங்கள்கிழமை மாலை பிரதமரிடம் அனைத்துக் கட்சிக்குழுவினர் வேண்டுகோள் விடுத்து, இது தொடர்பான மனு ஒன்றையும் அவரிடம் கொடுத்தனர்.

"கர்நாடகத்தில் உள்ள 4 அணைகளில் 97 டி.எம்.சி. அளவு தண்ணீர் இருக்கிறது. ஆனால் அவர்களுக்குத்தேவைப்படுவதோ 50 டி.எம்.சி. மட்டுமே.

எனவே மீதமுள்ள தண்ணீரில், தினமும் ஒரு டி.எம்.சி. வீதம் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீரைத் திறந்துவிடவேண்டும்" என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இது சம்பந்தமாக, கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவிடம் பேசுவதாகப் பிரதமர் அவர்களிடம் வாக்குறுதிஅளித்துள்ளார்.

இந்நிலையில், காவிரியிலிருந்து தண்ணீரைத் திறந்து விடுவது தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கர்நாடகமுதல்வர் கூட்டியுள்ளார்.

தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் நிச்சயமாகக் கிடைக்குமா, இல்லையா என்பது, இக்கூட்டத்தின் முடிவில்தெரிந்துவிடும்.

சோனியா வாக்குறுதி

இந்நிலையில், காவிரியிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக முதல்வரிடம் வற்புறுத்தப்போவதாக தமிழக அனைத்துக் கட்சிக் குழுவினரிடம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமைகாலை வாக்குறுதி அளித்துள்ளார்.

ஜனாதிபதியிடமும் முறையிட அனைத்துக் கட்சி முடிவு

காவிரிப் பிரச்சனை தொடர்பாக, ஜனாதிபதி கே.ஆர். நாராயணனிடமும் முறையிடப் போவதாக தமிழகஅனைத்துக் கட்சிக் குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை மாலைக்குள் அவர்கள் ஜனாதிபதியைச் சந்தித்து, இதுகுறித்துப் பேசவுள்ளனர் என்று தமிழககல்வி அமைச்சர் தம்பிதுரை கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+