For Daily Alerts
Just In
மணிப்பூர் சட்டசபை கலைக்கப்பட்டது
இம்பால்:
மணிப்பூரின் 7வது சட்டசபையைக் கலைக்குமாறு ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் செவ்வாய்க்கிழமைஉத்தரவிட்டார்.
அக்கடிதத்தை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சரவை, மணிப்பூர் அரசைக் கலைப்பதற்கான பரிந்துரையை கடந்த4ம் தேதி ஜனாதிபதிக்கு அனுப்பியது.
இதன் அடிப்படையில், இந்திய அரசியல் சட்டம் 356ஐப் பயன்படுத்தி மணிப்பூர் அரசைக் கலைக்குமாறு ஜனாதிபதிஉத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் மாநில சட்ட செயலாளரும் இதுகுறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட தீவிரவாதக் கொடுமைகள் காரணமாக, சட்டம்-ஒழுங்குபாதிக்கப்பட்டது. இதனால், ஆட்சியைக் கலைக்க அம்மாநில ஆளுநர் முடிவெடுத்ததாகவும், அதற்கானபரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
Comments
Story first published: Tuesday, September 11, 2001, 5:30 [IST]