For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மணிப்பூர் சட்டசபை கலைக்கப்பட்டது

By Staff
Google Oneindia Tamil News

இம்பால்:

மணிப்பூரின் 7வது சட்டசபையைக் கலைக்குமாறு ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் செவ்வாய்க்கிழமைஉத்தரவிட்டார்.

"மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம் சீர்குலைந்து விட்டது. அதனால், மணிப்பூர் அரசைக் கலைக்க வேண்டும்"என்று மணிப்பூர் ஆளுநர் வேத பிரகாஷ் மார்வா, மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியிருந்தூர்.

அக்கடிதத்தை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சரவை, மணிப்பூர் அரசைக் கலைப்பதற்கான பரிந்துரையை கடந்த4ம் தேதி ஜனாதிபதிக்கு அனுப்பியது.

இதன் அடிப்படையில், இந்திய அரசியல் சட்டம் 356ஐப் பயன்படுத்தி மணிப்பூர் அரசைக் கலைக்குமாறு ஜனாதிபதிஉத்தரவிட்டுள்ளார். மணிப்பூர் மாநில சட்ட செயலாளரும் இதுகுறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட தீவிரவாதக் கொடுமைகள் காரணமாக, சட்டம்-ஒழுங்குபாதிக்கப்பட்டது. இதனால், ஆட்சியைக் கலைக்க அம்மாநில ஆளுநர் முடிவெடுத்ததாகவும், அதற்கானபரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X