விமானங்களைக் கொண்டு நியூயார்க், வாஷிங்டன் மீது தீவிரவாதிகள் தாக்குதல்: 15000 பேர் பலி?
நியூயார்க்:
அமெரிக்காவின் 3 விமானங்களைக் கடத்திய தீவிரவாதிகள், 2 விமானங்களை நியூயார்க் நகரில் உள்ள 2 உலகவர்த்தக மையக் கட்டிடங்கள் மீது மோதச் செய்ததில், 110 மாடிகளைக் கொண்ட அந்த 2 கட்டிடங்களுமேமுழுவதுமாக இடிந்து தரைமட்டமாயின.
இந்தத் தாக்குதலில், இக்கட்டிடங்களில் உள்ள 15,000க்கும் மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டுள்ளதாகஅஞ்சப்படுகிறது.
அமெரிக்க நேரப்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை 9 மணிக்கு முதல் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.உலக வர்த்தக மையத்தின் முதல் கட்டிடத்தில்தான் முதல் தாக்குதல் நடந்தது.
விமானம் மோதிய வேகத்தில், கட்டிடம் பெரும் அதிர்வுக்கு உள்ளாகியது. கட்டிடம் முழுவதும் பயங்கரமாகத்தீப்பிடித்தது.
சிறிது நேரத்திலேயே, கடத்தப்பட்ட மற்றொரு விமானமும், இந்தக் கட்டிடத்துக்கு அருகிலிருந்த மற்றொரு உலகவர்த்தக மையக் கட்டிடத்தைத் தாக்கியது.
இதையடுத்து, ஏற்கனவே சேதமாகிக் கொண்டிருந்த முதல் கட்டிடம், இந்த அதிர்ச்சியின் காரணமாக, முழுவதுமாகஇடிந்து விழத் தொடங்கியது.
தொடர்ந்து, 2 கட்டிடங்களும் முழுவதுமாக இடிந்து, தரைமட்டமானது.
கடத்தப்பட்ட விமானங்களில் ஒன்று, பாஸ்டனில் இருந்து லாஸ் ஏஞ்சல்சுக்குச் சென்று கொண்டிருந்தது.