டீ வேண்டாம்; தண்ணீர்தான் வேண்டும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
"டீ எல்லாம் எங்களுக்கு வேண்டாம், தண்ணீர்தான் வேண்டும்" என்று தமிழக அனைத்துக் கட்சிக் குழு, பிரதமர்வாஜ்பாயிடம் கூறியது.
43 கட்சிகளைச் சேர்ந்த 100 பேர் இந்தக் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
திங்கள்கிழமை மாலை அவர்கள் பிரதமரைச் சந்தித்து, இதுகுறித்த மனு ஒன்றையும் கொடுத்தனர். அப்போது,பிரதமர் அவர்கள் அனைவருக்கும் டீ வழங்க ஏற்பாடு செய்தார்.
உடனே அனைத்துக் கட்சியினர், "எங்களுக்கு டீ எல்லாம் வேண்டாம், தண்ணீர்தான் வேண்டும்" என்று மறுத்தனர்.
அதற்கு வாஜ்பாய், "டீ போடுவதற்கும் தண்ணீர் வேண்டுமல்லவா?" என்று நகைச்சுவையுடன் கூறினார்.












Click it and Unblock the Notifications