"பேக்ஸ் இணைப்பே என் வீட்டில் கிடையாது" - தளவாய் சுந்தரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஜனாதிபதி, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுக்கு தனது அலுவலகத்திலிருந்து டான்சி அப்பீல்வழக்கின் அரசு வக்கீல் வெங்கடபதி குறித்து அவதூறான பேக்ஸ் செய்தி அனுப்பப்படவில்லை என்று தமிழகபொதுப்பணித்துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறியுள்ளார்.

சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, தளவாய் சுந்தரத்தின்வீட்டிலிருந்து பேக்ஸ் செய்தி அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் வெங்கடபதி குறித்து தரக்குறைவாகவும்,தன்னைத் தொடர்புப்படுத்தியும் கூறப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதுதொடர்பான பேக்ஸ் செய்தியையும் செய்தியாளர்களிடம் காட்டினார். அந்த தொலைபேசி எண்ணையும் அவர்கூறினார்.

இந்த புகாரை தளவாய் சுந்தரம் மறுத்துள்ளார். டெல்லிக்கு தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் குழுவுடன்சென்றுள்ள அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இந்தப் புகார் உள்நோக்கம் கொண்டது. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கருணாநிதி கூறிய தொலைபேசிஎண்ணில் எனது வீட்டில் பேக்ஸ் இணைப்பே கிடையாது. எனது வீட்டிலிருந்தும் யாருக்கும் எந்த பேக்ஸ் செய்தியும்அனுப்பப்படவில்லை என்றார் தளவாய் சுந்தரம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+