ரயில் கட்டணம் மேலும் உயராது: ரயில்வே அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

குன்னூர்:

இப்போதைக்கு ரயில் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய ரயில்வே இணைஅமைச்சர் திக்விஜய் சிங் கூறினார்.

குன்னூரில் நிருபர்களுக்குப் பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:

சமீபத்தில் தான் லக்கேஜ் மற்றும் பயணிகள் கட்டணம் உயர்த்தப் பட்டது. எனவே இப்போதைக்கு ரயில்கட்டணத்தை மேலும் உயர்த்தும் திட்டம் எதுவும் ரயில்வே அமைச்சகத்திடம் இல்லை.

புதிதாக ரயில் பாதைகள் அமைக்கும் திட்டத்திற்கு ரூ.22,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் அகல ரயில்பாதையாக மாற்றும் பணிக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவை ரயில்வே அமைச்சகத்தின் எதிர்காலவிரிவாக்கத் திட்டங்கள் ஆகும்.

நாட்டின் தென்பகுதிகள், ரயில்வே அமைச்சகத்தால் புறக்கணிக்கப்படுகின்றன என்று சொல்லப்படுவது முற்றிலும்தவறான கருத்தாகும். மேலும் நாட்டின் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதிக்கும் சிறப்புக் கவனம் செலுத்தப்படுவதுஇல்லை. எல்லாப் பகுதிகளும் சமம்தான்.

அதிகரித்துவரும் ரயில் விபத்துக்களைத் தவிர்க்கவும், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும்ரூ.17,000 கோடி நிதியைத் திரட்ட அரசு முடிவெடுத்துள்ளது. இந்த நிதி இன்னும் 5 ஆண்டுகளில் சேகரிக்கப்படும்.

சென்னையில் உள்ள ஐ.சி.எப். நிறுவனம், ஆர்டர் இல்லாமல் முழுமையாக இயங்காமல் உள்ளது. விரைவில் தகுந்தநடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இதற்கான ஆர்டர்கள் பெறப்படும்.

மேலும் "பேலஸ் ஆன் வீல்ஸ்" என்ற நவீன ரக ரயில்களை இயக்க மாநில அரசுகளும் முன்வந்தால்தான், அதைவெற்றிகரமாகச் செயல்படுத்த முடியும்.

மேலும், புதிய நீலகிரி மலை ரயில்வே திட்டத்தை விரைவில் செயல்படுத்த "யுனெஸ்கோ" நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றார் திக்விஜய் சிங்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+