நியூயார்க்கில் டிரக் நிறைய வெடி பொருட்களுடன் 2 பேர் கைது
நியூயார்க்:
தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளான நியூயார்க் நகரில், ஒரு டிரக் நிறைய வெடிபொருட்களுடன் சென்ற 2 பேர்போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதில் ஒரு கட்டடம் முழுவதுமாக இடிந்து, தரைமட்டமாகியது. 10,000க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர்.மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் ரத்தக் காயங்களுடன் மருத்துவமனையில் குவிந்து கொண்டு இருக்கின்றனர்.
இதையடுத்து, நியூயார்க் நகரம் முழுவதிலும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நியூயார்க்கின் மற்றொரு பகுதியில், டிரக் ஒன்றைச் சோதனையிட்ட நியூயார்க் போலீசார் அதிர்ந்துபோயினர்.
அந்த டிரக் நிறைய வெடி பொருட்கள் இருந்தன. விமானத் தாக்குதல் போதாதென்று, இந்த வெடி பொருட்களைக்கொண்டும் நகரின் முக்கியக் கட்டடங்களைத் தகர்க்கவும் தீவிரவாதிகள் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்த டிரக்கைப் பறிமுதல் செய்த நியூயார்க் போலீசார், அதிலிருந்த 2 பேரையும் கைது செய்துள்ளனர்.